img
img

வட கொரியாவை விட்டு வெளியேறி தென் கொரியா வந்தால் ரூ.13 கோடி பரிசு!
ஞாயிறு 05 மார்ச் 2017 14:29:59

img

வட கொரியா நாட்டைவிட்டு வெளியேறி தென் கொரியாவிற்கு வருகை தரும் நபர்களுக்கு தலா ரூ13 கோடி பரிசு வழங்கப்படும் என தென் கொரியா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட் டுள்ளது. ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளை செய்து வரும் வட கொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. வட கொரியா அதிபரான கிம் யோங்-அன்னின் சர்வாதிகார ஆட்சியால் அச்சுறுத்தலுக்கு உள் ளான பல முக்கிய அதிகாரிகள் அந்நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், வட கொரியா நாட்டின் முக்கிய எதிரி நாடான தென் கொரியா ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘வட கொரியா நாட்டை பற்றி ரகசிய தகவல்களுடன் தென் கொரியா நாட்டிற்கு வருகை தரும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 7,00,000 பவுண்ட்(13,01,94,487 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பிராங்கி, போர் விமானங்கள், பிற ராணுவ ஆயுதங்களுடன் அந்நாட்டில் இருந்து தப்பி தென் கொரியாவிற்கு வரும் ராணுவ வீரர்களுக்கு கூடுதலான தொகை அளிக் கப்படும் என தென் கொரியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வட கொரியா பற்றிய சதி திட் டங்களை தெரிந்துக்கொள்வதுடன், தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முடி யும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img