img
img

ஈராக் விமானப்படை தாக்குதலில் 14 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!
வெள்ளி 31 மே 2019 18:36:46

img

பாக்தாத்,

ஈராக் நாட்டில் முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய மோசூல் நகரின் அருகே இன்று விமானப்படை நடத்திய தாக்குதலில் 14 பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர். சிரியா, ஈராக் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இருநாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் தாக்குதல் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளது.ஆயிரக்கணக்கான தீவிர வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் தப்பி ஓடி விட்டனர். மேலும் சிலர் அரசுப் படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். தப்பியோடிய சில பயங்கரவாதிகள் ஈராக்-சிரியா இடையிலான மலையோர எல்லைப்பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். அங்கிருந்தவாறு அரசுப் படையினர் மீது அவ்வப்போது அதிரடியாக கொரில்லா தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கின் வடக்கு பகுதியான மோசூல் நகரின் அருகே உள்ள நினேவே மாநிலத்தின் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது போர் விமா னங்கள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img