img
img

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி 
செவ்வாய் 02 ஏப்ரல் 2019 14:21:54

img

காத்மண்ட், 

நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான புயல், மழை வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். நேப்பா ளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட  வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதையடுத்து ராணு வத்தினர், போலீசார் மற்றும் மீட்புப்பணியினர் வெள்ளத்தில் சிக்கிய  மக்களை  மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட புயல், கன மழையில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் யம் பிரசாத் தாகல் கூறுகையில்,  2-எம் ஐ ரக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் சிமரா பகுதி யில் மிகப்பெரிய விமானம், மக்களை மீட்க தயார் நிலையில் உள்ளது. 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் புயல்மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறினார்.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img