img
img

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது
சனி 02 மார்ச் 2019 15:44:05

img

இஸ்லாமாபாத், 

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேசினார். பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரதமர் இம்ரான்கான் குறுக்கிட்டார். அதற்காக அவர் மன்னிப்புக் கேட்ட வாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வு அல்ல. எனவே இந்திய தலைமை பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். அதே நேரத்தில் பதற்றம் வேண்டாம் என்னும் பாகிஸ்தானின் விருப்பத்தை பலவீனம் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நமது ஆயுதப்படைகள் கடுமையாக போரிடக்கூடியவை. எந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பதில் அளிக்க அவர்கள் தயாராக உள்ளனர். 

பாகிஸ்தான் சமாதானத்தை விரும்புகிற நாடு ஆகும். இந்த பிராந்தியத்தில் அமைதி தவழ வேண்டும். ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். இதுதான் பாகிஸ்தானின் விருப்பம். பதற்றம்  பாகிஸ்தானின் நலன்களுக்கானது அல்ல, இந்தியாவின் நலன்களுக்கானதும் அல்ல. எனவேதான்  இந்திய பிரதம ருடன் தொலைபேசியில் பேசுவதற்கு நான் முயற்சித்தேன். பிராந்தியத்தில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் நிலவுவதற்கு பதற்றத்தை தணிப்பதில் சர்வதேச சமூகம் பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் கூறினார். 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img