img
img

ஜப்பானில் தொடரும் மழை.. பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு.. 300 பேரை காணவில்லை
செவ்வாய் 10 ஜூலை 2018 16:29:20

img

டோக்கியோ:

ஜப்பானில் பெய்து வரும் மிகவும் மோசமான மழை காரணமாக இதுவரை அங்கு 130 பேர் பாலியாகி உள்ளனர். உலக வரலாற்றில் ஜப்பான் இன்னொரு பேரழிவை சந்தித்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் அங்கு சுமார் 650 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும்.ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்ப டுகிறது. இந்த மோசமான மழை காரணமாக மொத்தமாக 130 பேர் பாலியாகி உள்ளனர். இதனால் 300 பேர் காணவில்லை. மீட்புப்பணிகளில் மொத்தம் 74,000 பேர் ஈடுபட்டு இருக்கிறார். 2.4 லட்சம் வீடுகளில் உள்ள மக்கள் உணவின்றி கஷ்டபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 20 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 10000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இன்னும் ஒரு வாரம் அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img