img
img

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி
திங்கள் 04 ஜூன் 2018 12:57:03

img

துனிஸ்,

துனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம்.  இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர்.  இவர்களில் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பலியாகின்றனர்.

இந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர்.  படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்துள்ளது.  இதில் படகு கடலில் மூழ்கியது.

இதுபற்றிய தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவத்தில் 50 பேர் வரை பலியாகினர்.  68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.துனிஷிய நாட்டின் தென்கடலோர பகுதியில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  ராணுவ விமா னம் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரியில் இதுபோன்று புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 90 பேர் பலியாகினர் என புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img