img
img

ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசிப்பிடங்கள் மீது அமெரிக்க விமானப் படை தாக்குதல்- 80 பேர் பலி
வெள்ளி 26 மே 2017 19:04:28

img

டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறவினர்கள் வசிக்கும் இடங்கள் மீது அமெரிக்க விமானப் படை இன்று நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உள்பட 80 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெ ரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.இந்நிலையில், சிரியாவின் மயாடின் நகரில் உள்ள அரசு நகராட்சி கட்டிடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறவினர்கள் பலர் தஞ்சம் அடைந்து தங்கியுள்ளனர். இந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க விமா னப்படை மற்றும் சிரியா விமானங்கள் இன்று அதிகாலை குண்டுகளை வீசி ஆவேச தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 33 குழந்தைகள் உள்பட 80-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவரங்களை கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img