img
img

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை
செவ்வாய் 23 மே 2017 17:47:22

img

உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார். ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று நடத்திய ஏவுகணை சோதணையில் வெற்றியும் பெற்ற நிலையில் அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன. வடகொரியாவால், தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக் சங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென்கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வடகொரியாவின் இந்த நடவடிகைக்கு ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வட கொரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை, அந்நாட்டின் மீது வலுவான தடை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது குறிப் பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img