img
img

ரஷ்ய ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் உடல் சிதறி பலி
திங்கள் 03 ஏப்ரல் 2017 19:10:35

img

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செயிண்ட். பீட்டர்ஸ்பர்க் நகரின் 2 சுரங்க ரயில் நிலையங்களில் இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுரங்க ரயில் நிலையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரி ழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டிவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து, பல்வேறு மெட்ரொ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப் பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துள்ளார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img