img
img

ராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.
வியாழன் 15 நவம்பர் 2018 17:34:55

img

கொழும்பு, 

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெய சூர்யா அறிவித்தார்.பதவியிலிருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேவுக்குப் பதிலாக பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நேற்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக உயர் நீதி மன்றம் ரத்துச் செய்து விட்டதைத் தொடர்ந்து  இலங்கை நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டது.  இதையடுத்து நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. 

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் கலைக்க ப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் அதிபரின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.  

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி இலங்கை நாடாளுமன்றம் நேற்று காலை கூடியது. அவை நடவடிக்கை தொடங்கியதும் அதி பரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளி நடப்புச் செய்தார்.  அவர் வகித்து வந்த பிரதமர் பதவிக்கு கல்தா கொடுக்கப்பட்டது.

அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து ராஜ பக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறி வித்தார். 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img