(துர்க்கா) தம்பின்,
சுமார் வெ. 80 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக 2 ஆண்டாக மாணவர்கள் காத்தி ருக்கும் ரீஜண்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளியை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுக்க ம.இ.கா.வால் முடியவில்லையா என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். இப்பள்ளிக்கூட விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை தம்பின், கெமஞ்சேவில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ரீஜண்ட் தோட்ட புதியத் தமிழ்ப்பள்ளி குறித்து இதில் பேசப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் இழுபறி நிலையில் உள்ள இப்பள்ளிக்கூடம் குறித்து ம.இ.கா. தம்பின் தொகுதித் தலைவர் டத்தோ ராஜேந்திரன் வெறுமனே அறிக்கை விடுவதை விடுத்து, பள்ளியை திறப்பதற்கான காரியத்தில் இறங்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஆர்.தேவேந்திரம் (55) வலியுறுத்தினார். கறையான்களால் அரிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்த ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு பதில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தது ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வீரப்பனும் மாணவர்க ளின் பெற்றோர்களும் என்பது டத்தோ ராஜேந்திரனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் என்று பெற்றோர் சார்பாக எம்.மோகன் பேசுகையில் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 8.1.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்