லஞ்சாங் (நடராஜன் பெருமாள்)
லஞ்சாங் தமிழ்ப்பள்ளியின் விவகாரம் குறித்து மலேசிய நண்பன் தொடர்ந்து செய்திகளையும் விவாதங் களையும் முன்வைத் ததன் பயனாக அப்பள்ளி 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இந்தத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு 11-12-2017 திங்கட்கிழமை கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் வருகை புரியவுள்ளார். லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை என வட்டார இந்தியர்கள் குரல் எழுப்பியதன் பய னாக 71.6 மில்லியன் வெள்ளி செலவில் நவீன முறையில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது.
அக்காலக்கட்டத்தில் 2016ஆம் ஆண்டு மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் குத்தகை யாளருக்கும் பள்ளியின் மேலாளர் அற வாரியத்திற்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றினால் அது சாத்தியப்படவில்லை. இவ் விவகாரம் குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் தொடர்ந்து வெளி யிட்டு வந்த செய்தியின் காரணமாக நாடளவில் தமிழ்ப்பள்ளி, தமிழ் மொழி ஆர்வலர்களின் தொடர் நடவடிக்கையால் இப்பள்ளிக்கு விடிவு பிறந்தது. அதன் பயனாக வருகிற திங்கட்கிழமை கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் இப்பள்ளிக்கு வருகை புரியவுள்ளார்.
கல்வி அமைச்சிடம் இக்கட்ட டத்தை வடிவமைத்து சிறப்பாக செய்து முடித்த பெர்தாமோ நிறுவனத்தின் இளம் இந்திய குத்தகையாளரான விஜேந்திரன், அரசாங்கம் பயன்படுத்துவதற்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறும். ஆகவே, பொது மக்கள் குறிப்பாக இந்தியர்கள் திரளாக வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதேவேளையில், பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப் பினரும் லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹாஜி சர்கார் சம்சூடின், துணை கல்வி அமைச்சர் ப.கமலநாதன், தெமர்லோ தொகுதி மஇகா தலைவர் டத்தோ அ.சிவலிங்கம், தமிழ்ப்பள்ளி, மொழி ஆர்வலர்கள் வருகை புரியவுள்ளதாக ஏற்பாட் டாளர் பெர்காமோ உரிமையாளர் விஜேந்திரன் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்