img
img

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு இந்தியா 5,85,000 டாலர்கள் பெறுமான உதவி
புதன் 25 அக்டோபர் 2017 19:12:59

img

உயர்கல்வி வளர்ச்சியில் இலங்கையுடன் கூட்டுறவுக்காக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு 5,85,000 அமெரிக்க டாலர்கள் பெறுமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்துக்கு வேளாண்மை மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்காக இந்த உதவிகளை இந்திய அரசு செய்துள்ளதாக இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வேளாண் மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்காக 5,85,000 டாலர்கள் பெறுமான உபகரணங்கள் மற்றும் வாகனங்களை இந்தியா வழங்கியுள்ளது.

இதோடு, கல்விப் பாடத்திட்ட மேம்பாடு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, துறைசார் பரிமாற்றங்கள் ஆகிய ஆதரவுகளையும் இந்தியா வழங்குகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றையும் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்தியா கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img