img
img

பிரபாகரனை காப்பாற்ற வந்த அமெரிக்க கடற்படை!
ஞாயிறு 09 ஏப்ரல் 2017 14:47:35

img

2009ம் ஆண்டு ஸ்ரீலங்கா ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், புலிகள் பாரிய பின்னடைவை சந்தித்து முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடக்கப்பட்டவேளை சில தலைவர்களை காப்பாற்ற அமெரிக்க கடற்படை வருவதாக இருந்தது என்ற செய்தி வெளியாகி வந்தது. 2009ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி, லண்டனில் அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த டேவிட் மிலபான், அமெரிக்கா வில் ஹிலாரி கிளிண்டனை தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலரை காப்பாற்றவேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் அதற்கு முன்ன தாகவே அமெரிக்காவில் ராஜாங்க மட்டத்தில் உள்ள சிலர், இது தொடர்பாக முன்னரே ஆராயத் தொடங்கி இருந்தார்கள் என்பது, தற்போது வெளியா கியுள்ள்ள ஹிலாரி கிளிண்டனின் ஈமெயில்களில் இருந்து தெரியவருகிறது. காயப்பட்ட மக்களை அப்புறப்படுத்த ஒரு கப்பலை அனுப்புமாறு அமெரிக்கா கட்டளையிட்டது. பசுபிக் கட்டளை தளபதியாக இருந்த அடாம்ஸ் றொபேட் என்பவர், இதற்காக ஆயத்தங்களை செய்திருந்தார். இதேவேளை டெல்லியில் உள்ள தலைமை புலிகள் முற்றாக அழியவேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இலங்கையில் பிரச்சனை தீர்ந்தால் பல நாடுகளின் தலையீடு அங்கே மூக்கை நுளைக்கும் என்று புரிந்துகொண்ட அமெரிக்கா, பிரபாகரனை எவ்வாறாயினும் காப்பாற்றி வெளியேற்றினால் பின்னர் மீண்டும் சில வருடங்கள் கழித்து போராட்டம் தானாக ஆரம்பித்துவிடும் என்று கருதியுள்ளது. இதற்கு அமைவாக , சி.என்.எஸ் 1 என்ற சிறிய ரக கப்பல் ஒன்று முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பப்பட தயாராக இருந்துள்ளது. மக்களை காப்பாற்ற என செல்லும் படகில், புலிகள் தலைவர்கள் சிலர் தப்பிக்க உள்ளதாக சோனியாவின் தலைமையில் இருந்த இந்திய மத்திய அரசுக்கு தெரியவரவே உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன் இதை மகிந்தவுக்கு தெரியப்படுத்தி இருந்தார். இதனால் இதற்கு மகிந்த மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக ஹிலாரி சர்வதேச நாணய நிதியத்திற்கு, இலங்கைக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம் என்ற கட்டளையை பிறப்பித்தார். இதுவும் ஹிலாரி ஈமெயில் மூலம் அனுப்பிய தகவலில் வெளியா கியுள்ளது. இதனால் இலங்கை என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடியது. இதனிடையே நோர்வேயும் தலைவர் பிரபாகரனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை, அமெரிக்க திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது. இதனிடையே அமெரிக்க சி.ஐ.ஏ உளவுப் பிரிவின் உதவியோடு, அமெரிக்க அதிகாரி ஒருவர் புலிகளின் முக்கிய தொடர்பாடல் உறுப்பினர் ஒருவரோடு பேசியும் உள்ளார். தாம் சமாதானம் ஒன்றை கொண்டுவர முயற்ச்சி செய்வதாகவும் இந்தியா பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் தெரிவித் துள்ளார். இதனால், இந்தியாவில் உள்ள சிதம்பரத்தை புலிகளின் முக்கியஸ்தர்கள் அணுகி உதவிகளைக் கோரியுள்ளார்கள். இருப்பினும் சோனியா மறுத்துவிட்டதாக அறியப்படுகிறது. இதனை அடுத்தே போரை உக்கிரப்படுத்தி சில தினங்களில் முடித்துவிடும்படி இந்தியா கூறியதோடு தனது அனுபவம் மிக்க ராணுவ தளபதிகள் சிலரை பலாலிக்கு அனுப்பியும் உள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அது புலிகளுக்கு எதிராக இருந்தாலும் தனது சொந்த நலனிற்காக அது, ஒரு காலத்தில் புலிகளின் தலைமையை காக்க முனைந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இதனை சிவசங்கர் மேனன் அவர்கள் தான் எழுதி வெளி யிட்டுள்ள நூலில் தற்போது மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவு போல இருந்து வந்த ரணில். தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ள நிலை, இந்தி யாவையும் அமெரிக்காவையும் கடும் அதிருப்த்தியினுள் தள்ளியுள்ளது. இதனால் தற்போது குழம்பிப்போயுள்ள மைத்திரி, ரணிலோடு நேரடி மோதலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாக சிங்கள செய்திகள் குறிப்பிடுகிறது. சமீபத்தில் இந்தியாவோடு பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று, மகிந்த நேரடியாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் பார்வை மகிந்த பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது அமெரிக்க ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img